Loading . . .




காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த முதுகலை பட்டயப் படிப்பினை துவக்கி வைத்து, அதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr.V.ராஜீவ்

The Forecast 4 days ago சுற்றுச்சூழல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr.V.ராஜீவ், முதலமைச்சர் அவர்களின் பசுமை புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த முதுகலை பட்டயப் படிப்பினை துவக்கி வைத்து, அதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ஆஷா அஜித், இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் V. குமரேசன், ஆற்றல் கல்விகள் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் G. குமரேசன், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் R. சரவணன், பேராசிரியர் M. வெங்கட்ரமணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சுற்றுச்சூழல் Relateted News