சாலை பாதுகாப்பு குறித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
The Forecast 1 year ago திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமை தாங்கி பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தினார் என்று குறிப்பிட்டார். மேலும், இக்கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
0 Comments